0 0
Read Time:1 Minute, 5 Second

திட்டக்குடி அருகே, உள்ள கொடிக்களம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம் ரங்கசாமி (வயது 54), விவசாயி. இவர் சம்பவத்தன்று அதேஊரில் உள்ள விருத்தாசலம்-திட்டக்குடி மெயின்ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அருணாச்சலம் ரங்கசாமி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருணாச்சலம் ரங்கசாமி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆவினங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %