0 0
Read Time:1 Minute, 25 Second

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் கூடூர் தண்டவாள பாதையில் ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்து கிடந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக திருவாரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தண்டபாணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் கூடூர் பகுதியை சேர்ந்த பிரவின்பாபு (வயது35) என்பதும், இவர் நேற்றுமுன்தினம் இரவு ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக சென்ற ரெயில் மோதி இறந்ததும் தெரியவந்தது.

இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து திருவாரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %