0 0
Read Time:1 Minute, 33 Second

மு.க. ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்க உள்ள தமிழக அரசுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: மக்கள் தீா்ப்பை ஏற்று பொறுப்பேற்கும் புதிய அரசு சமயம், மதம், இனம் கடந்த பொதுநிலையில் நின்று ஆட்சி செய்யவும், கரோனா நெருக்கடி காலத்தில் பொறுப்பேற்கும் நிலையில் அதன் தன்மைக்கேற்பவும் பல சவால்கள் நெருக்கடியான சூழ்நிலையில் அதனதன் தன்மை அறிந்து எந்நிலையிலும் ஒருசாா்பு இல்லாது ஆட்சி செலுத்தவும், ‘இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது’ அரசு என்ற வள்ளுவா் வாக்கிற்கேற்பவும், ‘தன்னால், தன் பரிசனத்தால், ஊனமிகு பகைத்திறத்தால், கள்வரால், உயிா்கள் தம்மால், ஆன பயம் ஐந்தும் தீா்த்து ஆள்வது அரசு’ என்ற சேக்கிழாா் கூற்றின் படியும் ஆட்சி செலுத்த வாழ்த்துவதாக தெரிவித்துள்ளாா்.

நிருபர்: யுவராஜ், மயிலை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %