0 0
Read Time:1 Minute, 43 Second

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு ஏப்ரல் 30ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக வாரத்துக்கு நான்கு நீதிபதிகள் வீதம் 20 பேர் விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல மதுரை கிளையில் வாரத்துக்கு மூன்று நீதிபதிகள் வீதம் 15 நீதிபதிகள், விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசர வழக்குகளை விசாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மே மாதத்தில் வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும், அதன் மீதான விசாரணை, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் எனவும் நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.

மே முதல் வாரம் மட்டும் திங்கள் மற்றும் புதன் கிழமையில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும், அதன் மீதான விசாரணை வியாழன், வெள்ளிக் கிழமைகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %