0 0
Read Time:1 Minute, 11 Second

கம்மாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரை தலைமையிலான போலீசார் கம்மாபுரம் அருகே உள்ள கோ.ஆதனூர் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மணிமுக்தா ஆற்றங்கரை வழியாக வந்த ஆட்டோவை போலீசார் வழிமறித்தனர். போலீசாரை கண்டதும் டிரைவர் நடுவழியிலேயே ஆட்டோவை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து போலீசார் ஆட்டோவை சோதனை செய்த போது, அதில் மணல் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் கோ.ஆதனூர் மேலத்தெருவை சேர்ந்த கொளஞ்சி மகன் வடிவேல் என்பது தெரியவந்தது. இதையடுத்து வடிவேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %