0 0
Read Time:1 Minute, 33 Second

திருவெண்காடு, பிரதோஷத்தையொட்டி, சீர்காழி அருகே உள்ள பிரசித்தி பெற்ற திருப்புன்கூர் சிவலோகநாதர் கோவிலில் நேற்று சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னர், மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர் புறப்பாடு நடந்தது. திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி கோவில், சீர்காழி சட்டநாதர் கோவில், பூம்புகார் சாயாவனேஸ்வரர் கோவில், அன்னப்பன்பேட்டை கலிக்காமர் ஈஸ்வரர் கோவில், கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோவில், காத்திருப்பு சொர்ணபுரீஸ்வரர் கோவில், அல்லி விளாகம் நாகநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடந்தன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %