0 0
Read Time:1 Minute, 7 Second

சிதம்பரம் அருகே, இளநாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரம்மராயர். இவரது மனைவி தில்லைக்கரசி (வயது 47). சம்பவத்தன்று இவர் வீட்டின் பின்புறம் உள்ள புளிய மரத்தின் மீது ஏணி வைத்து ஏறி புளியம்பழம் பறித்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %