0 0
Read Time:1 Minute, 10 Second

ரம்ஜான் பண்டிகையையொட்டி ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி நாளை மின்சார ரெயில்கள் இயங்கும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு.

சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

ரம்ஜான் பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டு மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-அரக்கோணம், சூலூர்பேட்டை, மற்றும் கடற்கரை-செங்கல்பட்டு, வேளச்சேரி வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில்கள், ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும்.

இதேபோல் பயணிகள் முன்பதிவு மையங்களும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %