0 0
Read Time:1 Minute, 1 Second

கொள்ளிடம் அருகே, உள்ள மாதானம் கிராமத்தில் மே தின கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார்.

மாவட்ட தணிக்கை அலுவலர் மஞ்சுளா, ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஒன்றிய பொறியாளர் பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி சிவராமன் வரவேற்று பேசினார்.

தமிழ்நாடு மாநில ஊரக வளர்ச்சித்துறை முதன்மை பொறியாளர் அரிகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஊழியர்கள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %