0 0
Read Time:1 Minute, 30 Second

காட்டுமன்னார்கோயில் குமராட்சி மேட்டு தெருவில் மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விஷகதண்டுகள் கூடுகட்டி இருந்தது. மேலும் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் மீது கதண்டுகள் கடித்தன. பிறகு ஆடுகள் அலறும் சத்தத்தைக் கேட்டு பகுதி மக்கள் பார்த்தபோது கதண்டுகள் மேலே சுற்றுவதை பார்த்து தகவலை ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணனுக்கு தெரிவித்தனர்.

ஊராட்சி தலைவர் உடனடியாக காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு துறையின் நிலைய அலுவலர் அ.கொளஞ்சிநாதனுக்கு தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்து காட்டுமன்னார்கோயில் தீயணைப்பு மீட்பு பணி அ.கொளஞ்சிநாதன் தலைமையில் முன்னணித் தீயணைப்போர் பன்னீர்செல்வம் படை வீரர்கள் ஐயப்பன் பாலு மற்றும் பாலச்சந்தர் ஆகியோர் மூலம் விஷகதண்டு கூட்டினை முற்றிலும் அழித்தனர். உடன் கிராம மக்கள் தமிழரசன் ரஞ்சித்குமார் கார்த்தி ராஜா மோகன்தாஸ் ராமு ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தி: எழில்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %