0 0
Read Time:1 Minute, 31 Second

புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் இருந்து தவளக்குப்பம் நோக்கி காரில் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் நிக்கின் (வயது 25), ரஷிக்கா (20) ஆகியோர் சென்று கொண்டிருந்தனர்.அந்த கார், கடலூர் ரெட்டிச்சாவடி அடுத்த கரிக்கன்நகர் பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது அங்கு சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி, போன் பேசிக்கொண்டிருந்த குள்ளஞ்சாவடி ஆயத்துறையை சேர்ந்த நந்தகுமார்(35) என்பவர் மீது கார் மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 3 பேரும் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் புதுச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் காயமடைந்த நிக்கின் சென்னை போலீஸ் உயர் அதிகாரியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும். விபத்து தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் விசாாித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %