0 0
Read Time:1 Minute, 51 Second

நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த திருப்பணாம்பாக்கத்தை சேர்ந்தவர் தயாளன். இவருடைய மனைவி சுதா (வயது 45). இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, புதுச்சேரி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று தயாளன், சுதாவிடம் சாப்பாடு போடுமாறு கேட்டுள்ளார். அதற்கு சுதா தனக்கு உடல்நிலை சரியில்லை என கூறினார். இதனைத்தொடர்ந்து தயாளன் தனது மகள் ஆர்த்தியிடம் உணவு கேட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் சுதா வீட்டில் இருந்த மற்றொரு அறைக்கு சென்று திடீரென தன்மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் வலியால் அலறித்துடித்தார். இந்த சத்தம் கேட்டு தயாளன் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து சுதா மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாாின்பேரில் தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %