0 0
Read Time:1 Minute, 18 Second

மாமல்லபுரம், இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் எலைன் (வயது 67). இவர் அந்நாட்டில் லண்டன் நகரில் உள்ள கால்நடை ஆஸ்பத்திரியில் நர்ஸ்சாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்ததுள்ளார். பின்னர் சர்வதேச சுற்றுலா நகரமாக மாமல்லபுரத்திற்கு வந்தார். இங்குள்ள மக்களின் அன்பு, பாசத்தால் நெகிழ்ந்த அவர் இந்த நகரத்திலேயே தங்கி தெரு நாய்களுக்கு சேவை செய்து வந்தார்.

கடந்த கொரோனா ஊரடங்கின்போது மாமல்லபுரத்தில் தெரு, தெருவாக சென்று 3 வேளையும் தெரு நாய்களுக்கு உணவு வழங்கினார்.

இவருக்கு உதவியாக சுவீஸ் நாட்டை சேர்ந்த கிரிஸ்டீனா (69), பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பாஸ்களா (60) ஆகியோர் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் இணைந்து மாமல்லபுரத்தில் உள்ள தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %