0 0
Read Time:2 Minute, 7 Second

செங்குன்றம், சென்னை அடுத்த புழல் காவாங்கரை கண்ணப்ப சாமி நகரைச் சேர்ந்தவர் சேவியர் (வயது 64). இவர் மீஞ்சூர் அடுத்த அத்திபட்டில் ஒரு உணவகத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருடைய மனைவி தேவகி (58). இவர்களுக்கு செந்தில் (35), மாரி (33) ஆகிய 2 மகன்களும், ராணி (32) என்ற மகளும் உள்ளனர். ராணிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.

சேவியர் குடும்பத்துடன் மேல் தளத்திலும், ராணி குடும்பத்துடன் கீழ் தளத்திலும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு தாய்க்கும் மகளுக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மகள் ராணி சமையலறையில் இருந்த மண்எண்ணையை எடுத்து வந்து தாய் தேவகி தந்தை சேவியர் அண்ணன் மாரி ஆகியோர் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த தேவகி தனக்கு தானே தீ வைத்துக் கொண்டார். பலத்த தீக்காயங்களுடன் எரிந்து கொண்டிருந்த தேவகியை மகன் மாரி காப்பாற்ற சென்ற போது, அவருக்கும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது. இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த தேவகி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். மாரி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %