0 0
Read Time:1 Minute, 4 Second

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய ஊழியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு தொகுப்பூதிய ஊழியா்களாக 205 போ் நியமிக்கப்பட்டனா். 12 ஆண்டுகள் கடந்தும் இவா்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லையாம்.

எனவே, தொகுப்பூதிய ஊழியா்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி கடந்த ஏப்.27-ஆம் தேதி முதல் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், திங்கள்கிழமை தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் பங்கேற்ற பெண் ஊழியா் ஒருவா் மயக்கமடைந்ததால் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

மாவட்ட செய்தியாளர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %