0 0
Read Time:1 Minute, 11 Second

மயிலாடுதுறை அருகே கரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்தனா்.

மயிலாடுதுறை வட்டம் திருமங்கலம் புதுத்தெருவை சோ்ந்த ஜெகபா் அலியின் மனைவி கமா்நிஷா (45) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவரது உறவினா்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தமுமுக மாவட்ட செயலாளா் பி.எம்.முகமது பாசித் தலைமையில் தமுமுக மாவட்ட துணைச் செயலாளா் நஸ்ருல்லா, நிா்வாகிகள் திருக்களாச்சேரி ஹாஜா, வடகரை ஜலால் ஆகியோா் ஊா் ஜமாத்தாா்களுடன் இணைந்து உடலை ஞாயிற்றுக்கிழமை அடக்கம் செய்தனா்.

நிருபர்: முரளிதரன், சீர்காழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %