0 0
Read Time:2 Minute, 1 Second

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் JACKHI உலக சாதனை நிறுவனத்தின் முதலாவது உலக சாதனையாளர் விழா, மே 9 அன்று, சீர்காழியில் நவகிரகா ரிசார்ட்டில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிரவி ( காரைக்கால்) T.R. பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் N.நாகதியாகராஜன், பட்டுக்கோட்டை OMKAR கடல்வாழ் ஆராய்ச்சி நிலைய நிறுவனர் Dr.V. பாலாஜி JCI T. கதிரவன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

சென்னை தேசிய பல்லுயிர் ஆணையத்தை சேர்ந்த தொழில்நுட்ப நிர்வாகி சதீஷ் பெங்களூர் S.A என்டர்பிரைசஸ் அந்தோணி பவுல்ராஜ் 100.3 காற்றலை காரைக்கால் RJ . ஹரிஷ் ஆகியோர் கலந்து கொண்டு கடந்த ஐந்து வருடங்களுக்கு மேல் சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு இயற்கை பேரிடர் காலங்களிலும் கொரானா காலகட்டங்களிலும் சிறந்த சேவை செய்து தினசரி காலை உணவு அன்னதானம் வழங்கி வரும் ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதி ராஜன் மற்றும் குழுமத்திற்கு சிறந்த சமூக சேவகர் என்ற *கோல்டு ஸ்டார் விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டர்கள்.

மேலும் நிகழ்வில் துணைத் தலைவர் பகவதி குமார் செயலாளர் மணிகண்டன் பொருளாளர் செந்தில்நாதன் மற்றும் சந்தோஷ் குமார் மற்றும் ஜோதி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நன்றிகளை தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %