0 0
Read Time:1 Minute, 19 Second

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார்.

ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் நடந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளும், டி.ஜி.பி. திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நேற்று நடைபெற்ற ஆலோசனை முடிவில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த நிலையில், இன்றும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் திட்டத்தை துரிதப்படுத்துவது, பரிசோதனையை அதிகரிப்பது மற்றும் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %