0 0
Read Time:1 Minute, 14 Second

கடலூர் மாவட்டத்தில் ஆலம்பாடி என்ற கிராமம்  அமைந்துள்ளது. இந்த கிராமத்திலுள்ள  புவனகிரி – மருதூர் சாலையிலிருந்த பழைய பாசன வாய்க்கால் பாலம் இடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 2,௦௦,௦௦,௦௦ மதிப்பிலான புதிய பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து இந்த பாலத்தின் கட்டுமான அமைவிட பணிகளை பொறியாளர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.அதன் பின் பாலம் கட்டப்பட உள்ள இடத்தின் தன்மை மற்றும் வரை படத்தில் உள்ளது போல கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதா என்று அவர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். மேலும் இந்த ஆய்வின் போது குறிஞ்சிப்பாடி உதவி பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் ஆய்வில் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.

நிருபர்: பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %