0 0
Read Time:1 Minute, 2 Second

வடலூர் நகராட்சியில் ஆபத்தாரணபுரம், ஜோதி நகர், என்.எல்.சி, ஆபீசர்ஸ் நகர் ஆகிய இடங்களில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி குழு தலைவர் என்ஜினீயர் சிவக்குமார் தலைமை தாங்கி ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

நகராட்சி சேர்மன் சிவகுமார், நகராட்சி ஆணையாளர் குணாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி பொறியாளர் சிவசங்கரன் வரவேற்றார்.

இதில் தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், இளைஞரணி துணை அமைப்பாளர் சக்திவேல், கவுன்சிலர்கள் பிரபு, இளவரசன், சாகுல் ஹமீது, விஜயராகவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %