0 0
Read Time:4 Minute, 24 Second

தமிழ்நாட்டில் தக்காளி வைரஸ் பரவியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் தாராபுரம் சாலை பெரிச்சிபாளையம் பகுதியில் நடைபெற்றுவரும்
மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமான பணிகளை மக்கள்
நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் . பின்னர் திருப்பூர் மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு
பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இலவச டேப்லட்களை வழங்கிய பின் அவர் செய் தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்் 11 மருத்துவக்்் கல்லூரிகள் கொண்டு வந்ததன் மூலம் ஏராளமான
மாணவ மாணவிகள் பயன் அடைந்திருப்பதாகவும் , தற்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்று
கட்டுப்பாட்டிற்குள் இருந்தாலும் பொதுமக்கள் மீண்டும் முழுக் கட்டுப்பாட்டுடன்
இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் . கேரள மாநிலத்தில் தக்காளி வைரஸ் நோயின் தாக்கம் தமிழகத்தில் இருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை எனவும் கேரள மாநிலத்திலும் தற்போது இல்லை என கேரள
மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருப்பதாகவும் இதனால் எந்த பாதிப்பும் இல்லை என
அவர்கள் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் இது குறித்து
தமிழ்நாட்டில் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் தெரிவித்தார். கேரள மாநிலத்தில்
சவர்மா உணவால் ஏற்பட்ட பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து தமிழ்நாடு முழுவதும்
கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு இருப்பதாகவும் தமிழ்நாட்டில் சவர்மாவிற்கு தடை என்ற செய்தியில் உண்மை இல்லை என்றும் கூறினார்.

சவர்மாவை பதப்படுத்தப்பட்டு நன்கு சமைத்து இரண்டு மணி நேரத்திற்குள் விற்பனை செய்வதை
உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஆறு ஆண்டுகளுக்கு பின்பு
அரசாணை வெளியிடப்பட்டுள்ள முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தகுதித் தேர்வு தேதி
விரைவில் அறிவிக்கப்படும். 340 கோடியில் திருப்பூர் மாவட்ட மருத்துவ கல்லூரி ,
மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வர கூடிய சூழ்நிலையில் ஆகஸ்ட்
மாதத்திற்குள் பணிகள் முடிக்க பொதுப்பணித் துறையிடம் கேட்டுக்
கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்குப் பிறகு முதலாமாண்டு மருத்துவ மாணவ மாணவியர்களிடம் பேசிய அவர் சேவை மனப்பான்மையுடன் மாணவர்கள் கல்வி பயின்று பணியாற்ற வேண்டும் எனவும் சவாலான சூழ்நிலையில் கல்லூரியில் சேர்ந்துள்ள நீங்கள் ஆராய்ச்சியின் மூலம் புதிய மருந்துகளை கண்டுபிடிக்க
வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %