0 0
Read Time:1 Minute, 17 Second

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

இதனால், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் குறைந்து வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது மணல்மேட்டை அடுத்த அகரமணல்மேட்டில் உள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பெருமளவு தண்ணீர் வீணாகி வருகிறது.

இதன் காரணமாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின்கீழ் தண்ணீர் வினியோகம் பெறும் கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே, அகரமணல்மேட்டில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %