0 0
Read Time:1 Minute, 16 Second

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பேரூராட்சி பகுதிகளில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 3 நீர்நிலைகள் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை சென்னை பேரூராட்சிகளின் இணை இயக்குனர் மலையமான் திருமுடிக்காரி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அந்தப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கனகராஜ், உதவி செயற்பொறியாளர் வரதராஜன், பேரூராட்சி மன்றத் தலைவர் கண்மணி அறிவுவடிவழகன், செயல் அலுவலர் தமிழ்ச்செல்வன், இளநிலை பொறியாளர் முத்துக்குமாரசாமி, பேரூராட்சி துணைத்தலைவர் சுப்ரமணியன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %