0 0
Read Time:1 Minute, 30 Second

மணல்மேட்டை அடுத்த, ஆதமங்கலம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகன். ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மீனலோசினி (வயது 31) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

மீனலோசினிக்கு அவரது மாமனார், மாமியார் இடையே பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதன் காரணமாக மீனலோசினி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தலைஞாயிறு பகுதிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடி பெயர்ந்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த மீனலோசினி சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மீனலோசினி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் மணல்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனலோசினிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் முடிவடையாததால் உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %