0 0
Read Time:57 Second

வடசென்னை, அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

சென்னை, மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள 3 அலகுகளில் தலா 210 விதம் 630 மெகாவாட், 2-வது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 விதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் முதல் யூனிட்டில் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள்ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %