0 0
Read Time:1 Minute, 38 Second

திருக்கடையூர், செம்பனார்கோவில் அருகே, நல்லத்துக்குடி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் இந்திரன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் கபிலன் (25). இவர்கள் இருவரும் கடந்த 11-ந் தேதி மோட்டார் சைக்கிளில் செம்பனார்கோவில் போலீஸ் நிலையம் அருகே மேட்டிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிளும், காளகஸ்திநாதபுரம் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த நரசிம்மன் மகன் மணியரசன் குமார்(20), அவரது நண்பர் ஆறுபாதி புதுத்தெருவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் முருகேசன்(20) ஆகியோர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில், 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் தலையில் படுகாயமடைந்த இந்திரன் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %