0 0
Read Time:2 Minute, 38 Second

குத்தாலம் தாலுகா, பேராவூர் கிராமத்தில் உள்ள புகழ்வாய்ந்த காமாட்சி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா, கடந்த 6-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து கடந்த 10 நாட்களாக அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் தீமிதி உற்சவம் நடந்தது.

முன்னதாக பக்தர்கள் வீரசோழன் ஆற்றங்கரையில் இருந்து கங்கணம் கட்டிக்கொண்டு மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் கோவிலின் எதிரே அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இதேபோல, திருக்கடையூர் அருகே உள்ள அன்னப்பன்பேட்டை மெயின் ரோடு அருகே திரவுபதி அம்மன் கோவிலில் கடந்த 6-ந் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் மாலை சத்திரகுளக்கரையிலிருந்து கரகம் புறப்பட்டு விவேகானந்தர் வீதி மெயின் ரோடு வழியாக பக்தர்கள் கோவிலை வந்தடைந்தனர்.

அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

தொடர்ந்து இரவு 7 மணி அளவில் கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அக்னி குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.

இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு செம்பனார்கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %