1 0
Read Time:2 Minute, 13 Second

தரங்கம்பாடி, மே- 20;
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஈச்சங்குடி யிலுள்ள வசந்த முருகு பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் பி.கண்ணன் தலைமை வகித்தார், கல்லூரியின் நிர்வாகி பாலமுருகு முன்னிலையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு வெளிநாடுகளைச் சேர்ந்த ஒன்பது பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிய நூற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளை சார்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரியின் மாணவ மாணவிகள் அனைவர்களுக்கும் பணி ஆணைகளை வழங்கி வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

இதில் நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் மு.ஞானவேலன், செம்பை தெற்கு ஒன்றிய செயலாளர் எம்.அப்துல்மாலிக், ஈச்சங்குடி ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், கல்லூரியின் துணை முதல்வர் மணிகண்டன் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரியின் அலுவலர் தேவிகா வேந்தன் நன்றி கூறினார்.

படவிளக்கம்; வசந்த முருகு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் வெளி நாடுகளில் பணிபுரிய மாணவ-மாணவிகளுக்கு பணி ஆணை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கினார்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %