0 0
Read Time:2 Minute, 33 Second

சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அரசாணை வெளியிட்ட தமிழக முதலமைச்சர் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் சிற்றம்பல மேடையில் (கனகசபை) ஏறி சுவாமி தரிசனம் செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து தமிழக அரசின் சார்பில் அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோருக்கு நன்றி தெரிவித்து சிதம்பரம் கீழ சன்னதி அருகில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத்தலைவர் ஜெமினி எம்.என் ராதா தலைமையில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர் .

இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினரும் மாவட்ட மூத்த துணைத் தலைவருமான தில்லை.ஆர்.மக்கின் மாவட்ட துணை தலைவர்கள் ராஜா சம்பத்குமார் ஆர். சம்மந்தமூர்த்தி ஜி கே .குமார் மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பு மாவட்ட செயலாளர்கள் ஆர்.வி.சின்ராஜ் ஆட்டோ டி.குமார் டி. பட்டாபிராமன் மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன் தில்லை கோ .குமார் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் தில்லைச் செல்வி கோ.ஜனகம் ராதா ராஜ்குமார் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு முதலமைச்சருக்கும் இந்து சமய அறநிலை துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து கோஷமிட்டனர்.

மாவட்ட செய்தியாளர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %