0 0
Read Time:1 Minute, 48 Second

சிதம்பரம் அருகே உள்ள மணலூர் தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிப கிடங்கு உள்ளது இந்த கிடங்கில் நேற்று தமிழக வேளாண்மைத் துறை மற்றும் உழவர்நலத்து துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்களுடன் தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் ராஜாராமன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குனர் பிரபாகரன் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர் நுகர்பொருள் வாணிப கிடங்குகள் சென்றஅமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி சீனி பருப்பு உள்ளிட்ட பொருட்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் டாக்டர் மனோகரன் புவனகிரி பேரூராட்சித் தலைவர் கந்தன் சிதம்பரம் நகர திமுக துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி நகரமன்ற உறுப்பினர்கள் மணிகண்டன் தில்லை சரவணன் இளைஞர் அணி மக்கள் அருள் தகவல் தொழில் நுட்ப அணி ஸ்ரீதர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %