0 0
Read Time:5 Minute, 49 Second

மயிலாடுதுறை, மே- 24;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டம் கங்கணம்புத்தூர் ஊராட்சி நீடுர் ஏ.ஜெ பேன்ஸி மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம். பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டு 15,686 விவசாயிகளுக்கு ரூ.34 லட்சம் மதிப்பில் தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான், தோட்டக்கலை உபகரணம், மின் தெளிப்பான் போன்ற விவசாய இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினர்.

இத்திட்டத்தின் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 37 கிராம ஊராட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 1997 கிராம ஊராட்சிகளில் சுமார் 9 லட்சம் விவசாயிகள் பயன்பெறுகின்றனர். மயிலாடுதுறை விவசாயிகள் பயனடைகின்றனர். வேளாண்மை துறையின் சார்பில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 7400 விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பில் தென்னங்கன்றுகளும், 555 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் வரப்பு உளுந்து சாகுபடிக்கு விதை விநியோகம், 185 விவசாயிகளுக்கு ரூ.1.3 லட்சம் மதிப்பில் கைத்தெளிப்பானும், 247 விவசாயிகளுக்கு ரூ.55 லட்சம் மதிப்பில் மின்களத் தெளிப்பானும் என மொத்தம் வேளாண்மைத்துறை சார்பில் 8,387 விவசாயிகளுக்கு ரூ.20.12 லட்சம் மதிப்பில் பல்வேறு உபகரணங்களும் வழங்கப்பட்டது.

தோட்டக்கலைத்துறை சார்பில் 4.625 விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் செலவில் வீட்டுத்தோட்டம் அமைக்கவும். 74 விவசாயிகளுக்கு ரூ.8 லட்சம் செலவில் பாரம்பரிய காய்கறிகள் மற்றும் சாகுபடி ஊக்கத்தொகையும், 650 விவசாயிகளுக்கு ரூ.6.5 லட்சம் மதிப்பில் தோட்டக்கலை உபகரணங்களும், 1850 விவசாயிகளுக்கு ரூ.1.8 லட்சம் மதிப்பில் வரப்பு ஓரங்களில் நடவு செய்ய மரக்கன்றுகள் விநியோகங்களும் என மொத்தம் 7.199 விவசாயிகளுக்கு ரூ. 14.13 லட்சம் மதிப்பில் தோட்டக்கலை பயிர்களும், மேலும் வேளாண்மைத்துறையின் சார்பில் உழவர் உற்பத்தியாளர் குழுவைச் சேர்ந்த 100 விவசாயிகளுக்கு 1006 மானியத்துடன் ரூ.5 லட்சம் மதிப்புள்ள பவர் டில்லர்கள் வழங்கப்பட்டது. என மொத்தம் 15,686 பயனாளிகளுக்கு விவசாய இடுபொருள் சார்ந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை வட்டாரத்தில் 9 வட்டாரத்தில் 6 கிராம ஊராட்சிகளும், சீர்காழி கிராம ஊராட்சிகளும், கொள்ளிடம் வட்டாரத்தில் 6 கிராம ஊராட்சிகளும், செம்பனார்கோயில் வட்டாரத்தில் 9 கிராம ஊராட்சிகளும், குத்தாலம் வட்டாரத்தில் 7 கிராம ஊராட்சிகளும் என மொத்தம் 37 கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சோ.முருகதாஸ், மாவட்ட ஊராட்சி தலைவர் மங்கை உமாமகேஸ்வரி சங்கர், மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் என்.செல்வராஜ், ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர் முருகண்ணன், வேளாண்மை இணை இயக்குநர் ஆட்சியர் நேர்முக உதவியாளர் ஜெ. சேகர், சி.ஜெயபாலன், மயிலாடுதுறை ஒன்றிய குழுத்தலைவர் காமாட்சிமூர்த்தி, செம்பனார்கோயில் ஒன்றிய குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சுரேஷ், இளையபெருமாள், ஒன்றிய குழு உறுப்பினர் மும்தாஜ், வேளாண்மை உதவி இயக்குநர் சா.சுப்பையன், ஊராட்சி மன்றதலைவர் ஆர். சுகன்யா ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %