0 0
Read Time:4 Minute, 2 Second

குத்தாலம், மே- 24;
மயிலாடுதுறை மாவட்டம்
குத்தாலம் ஒன்றியம் நக்கம்பாடியில் குத்தாலம் ஒன்றியத்தின் திமுக சார்பாக ஓயாத உழைப்பின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் செய்திருந்தார். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குத்தாலம் மேற்கு ஒன்றிய செயலாளர் முருகப்பா மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் மங்கை உமா மகேஸ்வரி சங்கர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு பேச்சாளர்களாக தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், தி.மு.கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் வி.சி.சந்திரகுமார், தலைமை கழக பேச்சாளர் ஆத்தூர் சபரி, மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் கல்யாணம், திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குத்தாலம் க.அன்பழகன் ஆகியோர் கலந்துகொண்டு ஓராண்டு கழக ஆட்சியில் நடைபெற்ற பல்வேறு சாதனைகளை விளக்கி பேசினர்.

பொதுக்கூட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக வழங்கப்படாத தாலிக்கு தங்கம் வழங்கும் நலத்திட்ட உதவியை திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்க வேண்டிய நலத்திட்டத்தை ஒரே ஆண்டில் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு வழங்கப்படாத இலவச மின்சார இணைப்பு ஓராண்டில் ஒரு லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. மகளிருக்கான இலவச பேருந்து திட்டம் உள்ளிட்ட கழகத்தின் ஓராண்டில் நடைபெற்ற பல்வேறு சாதனைகளை விளக்கி பேசினார்.

இக்கூட்டத்தில் மாநில விவசாய அணி இணை செயலாளர் ஆர்.அருள்செல்வன், மாவட்ட திமுக அவைத்தலைவர் கே.ஜி.சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக், மாவட்ட துணை செயலாளர் கண்ணகி பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.அன்பழகன், எம்.அப்துல் மாலிக், இளையபெருமாள், சசிகுமார், ரவிகுமார், மலர்விழி, திருமாவளவன், ஞான இமயநாதன் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர் சுந்தர்ராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், அரசு வழக்கறிஞர் டாக்டர் இராம.சேயோன், மாவட்ட இளைஞரணி அணி துணை செயலாளர் சிவதாஸ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சௌமியன், நக்கம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா ராஜ்குமார் உள்ளிட்ட திரளான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %