0 0
Read Time:1 Minute, 54 Second

தரங்கம்பாடி, ஜூன்-5, மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் சர்ச் தெரு பகுதிகளில் த.பே.மா.லு கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் மரம் நடும் ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்றது.

தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் அருள் மரியநாதனின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி தரங்கம்பாடி பேரூராட்சி மற்றும் திருவாரூர் வனம் தன்னார்வ அமைப்பு ஆதரவுடன் நடைப்பெற்ற விழாவில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் கலந்துக்கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார். பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி, கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ், துணை முதல்வர்கள் ஜான்சன் ஜெயக்குமார், ஜோயல் எட்வின் ராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் கமலகண்ணன், கவுன்சிலர் கவிதா மற்றும் பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள்,பொதுமக்கள் கலந்துக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து கல்லூரி கலையரங்கில் நடந்த விழாவில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

படவிளக்கம் ;- பொறையாரில் மரக்கன்றுகளை எம்எல்ஏ நிவேதா முருகன், கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் ஆகியோர் கலந்துகொண்டு நட்டு வைத்தனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %