0 0
Read Time:2 Minute, 48 Second

மயிலாடுதுறை:அதிமுக ஊராட்சி மன்ற தலைவர், துணைத்தலைவர் உள்பட 100 பேர் திமுகவில் இணைந்தனர்

தரங்கம்பாடி, ஜூன்.15: மயிலாடுதுறை மாவட்டம் பொறையாரில் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.

செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளைபெருமாள் நல்லூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவரும், ஒன்றிய மகளிர் அணி தலைவரும்மான தீபா முனுசாமி தலைமையில் துணைத் தலைவர் நவநீதம், வார்டு உறுப்பினர் கலாராணி உள்ளிட்ட 100 -க்கும் மேற்பட்ட அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி செம்பை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் எம்.அப்துல் மாலிக், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர் ஆகியோரின் ஏற்பாட்டில், பொறையாரில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்வில், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட திமுக பொருளாளர் ஜி.என்.ரவி, அவைத் தலைவர் மனோகரன், மாவட்ட பிரதிநிதி மணிமாறன், துணைச் செயலாளர் ஏ.கே.ஆனந்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்திக், ஒன்றிய குழு துணை தலைவர் பாஸ்கர், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அமுர்த விஜயகுமார், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் செந்தில், ஊராட்சி மன்ற தலைவர்கள் தட்சிணாமூர்த்தி நாகராஜன் ரங்கராஜன் சாமிநாதன் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

படவிளக்கம்:பொறையாரில் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் முன்னிலையில் பிள்ளைப்பெருமாள் நல்லூர் அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தீபம் முனுசாமி உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்தனர்

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %