0 0
Read Time:2 Minute, 40 Second

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன்னாள் காங்., தலைவர் ராகுல் காந்தியை விசாரணைக்கு அழைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள தபால் நிலையம் அருகில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.வி. செந்தில்நாதன் தலைமை தாங்கினார். நகர்மன்ற உறுப்பினர் தில்லை.ஆர்.மக்கின் வரவேற்றார்.
கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத்தலைவர் ஜெமினி எம்.என். ராதா வட்டாரத் தலைவர்கள் சுந்தர்ராஜன் செழியன் மணிமொழி இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் அன்பு மாநில ஆர்.டி.ஐ.துறை பொதுச் செயலாளர் ஸ்டிபன் முத்துபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் மணிரத்னம் மாநில செயலாளர் பி.பி.கே சித்தார்த்தன் ஜெயச்சந்திரன் டாக்டர் செந்தில்வேலன் விவசாயி அணி தலைவர் இளங்கீரன்
முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் தம்புசாமி மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தவிர்தாம்பட்டு விசுவநாதன் பி வெங்கடேசன். மாவட்ட செயலாளர்கள் விநாயகம் பாலதண்டாயுதம்
தில்லை கோ குமார் ஆர் வி. சின்ராஜ் பார்த்திபன் பகவத்சிங் சிவசக்தி ராஜா எஸ்.எஸ்.நடராஜன் பேச்சாளர்மோகன்தாஸ் இளைஞரணி சட்டமன்ற தொகுதி தலைவர் மிஸ்கின் சையத் சதாத். மகளிர் அணியைச் சேர்ந்த தில்லி செல்வி இந்திரா ஜனகம் ராதா மாலா கரோலின் உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத்தலைவர் ஆர் சம்பந்தமூர்த்தி நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்:பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %