0 0
Read Time:2 Minute, 21 Second

தளபதி விஜய் அவர்களின்பிறந்த நாள் ஜூன் 22 முன்னிட்டு அகில இந்திய மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் முதற்கட்டமாக மயிலாடுதுறை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் சி.எஸ்.குட்டிகோபி அவர்களின் தலைமையில் கொள்ளிடம் ஒன்றியம் சோதியக்குடி ஊராட்சியில் மாவட்ட பொருளாளர்
தமிழன்ரமேஷ் அவர்களின் ஏற்பாட்டில் சோதியக்குடி அரசு ஆரம்ப பள்ளி 65 மாணவ மாணவிகளுக்கு நோட்டுபுக், பேனா, பென்சில், வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சிதம்பரநாதபுறம் மீனாட்சிஅம்மாள் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் சுமார் 110 மாணவர்களுக்கு நோட்புக் ,பேனா, பென்சில், மற்றும் பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சுமார் 500 லிட்டர் வாட்டர் டேங்க்கையும் வழங்கினர்.

மேலும் துப்புரவு தூய்மை பணியாளர்களுக்கு சுமார் 5 நபர்களுக்கு புடவை ,5 கிலோ அரிசியும் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி அவர்கள் வழங்கி உரையாற்றினார் மேலும் அதில் தெரிவித்துள்ளது தளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நடைபெற உள்ளது பொதுமக்களும் ஏழை எளிய மக்களும் பயன்பெறும் வகையில் 365 நாட்களும் தளபதி விஜய் மக்கள் இயக்கம் தளபதி விஜய் அவர்களின் பெயரில் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை மயிலாடுதுறை மாவட்டத்தில் வழங்கும் எனவும் தெரிவித்துக் கொண்டார்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %