0 0
Read Time:2 Minute, 53 Second

தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்
மயிலாடுதுறை மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தளபதி விஜய் அவர்களின் 48-பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் மயிலாடுதுறை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் சி.எஸ்.குட்டிகோபி
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மயிலாடுதுறை குழந்தைகள் நல காப்பகத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காலை உணவு இரண்டு கைகள் இல்லாமல் ஆசிரியர் உதவியுடன்+2 தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவி லட்சுமி அவர்களுக்கு கல்லூரி கட்டணமாக முதல் தவணையாக தொகை 5000 வழங்கினார் அதன் தொடர்ச்சியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் மணிமாறனிடம் மரக்கன்றுகளையும் , சுவர் கடிகாரத்தையும் வழங்கினார் பின்பு சீர்காழி தலைமையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சுமார் 15 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு 5 கிலோ அரிசியும், மளிகை பொருட்களையும் மற்றும் சீர்காழி பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நோட்புக், பேனா, பென்சில், மற்றும் பல்வேறு நலத்திட்ட வழங்கினார் மேலும் மயிலாடுதுறை பெரியார் அரசு மருத்துவமனையில் சுமார் 200 நபர்களுக்கு மதிய உணவுகளை மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் சி.எஸ்.குட்டிகோபி அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் ரமேஷ் சீர்காழி ஒன்றிய தலைவர் கமல் செம்பனார்கோவில் ஒன்றிய துணை தலைவர் நடராஜ் சீர்காழி ஒன்றிய இளைஞரணி தலைவர் சரவணன் என்.ஆர்.கீதை முரளிதரன் வில்லு விவர்த்தன சுறா திலீப் குத்தாலம் ஒன்றிய நிர்வாகி ஹரிஷ் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: முரளிதரன்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %