0 0
Read Time:1 Minute, 42 Second

தரங்கம்பாடி பேரூராட்சியில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியை பூம்புகார் எம்எல்ஏ பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

தரங்கம்பாடி, ஆகஸ்ட்- 04;
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சி,11வது வார்டு சமையந்தெருவில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தரை மட்ட நீர் தேக்கத் தொட்டி அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல், பேரூர் நகர திமுக செயலாளர் முத்துராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி கமலக்கண்ணன், சுகாதாரத் துறை ஆய்வாளர் இளங்கோவன், பேரூராட்சி துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன், பேரூராட்சி திமுக அவை தலைவர் கந்தசாமி, மாவட்ட திமுக பிரதிநிதி சடகோபன், 11 வது வார்டு கவுன்சிலர் மனோகரி பால்ராஜ் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %