0 0
Read Time:1 Minute, 56 Second

சிதம்பரம், சிதம்பரம் அண்ணாமலை நகர் அடுத்த வல்லம்படுகை மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 63). நேற்று முன்தினம் இவர், வீட்டை பூட்டி விட்டு மயிலாடுதுறைக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறந்த நிலையில், அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.

மேலும், பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.80 ஆயிரம் ஆகியன திருடு போயிருந்தது. போலீஸ் விசாரணை இதுகுறித்து மணி, அண்ணாமலை நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, சம்பவ இடத்தை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக் கள் மூலம் பதிவான காட்சிகளையும் போலீசார் கைப்பற்றி, மர்ம நபர்கள் உருவம் அதில் பதிவாகி இருக்கிறதா? என்று பார்வையிட்டு அடையாளம் கண்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ. 3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %