0 0
Read Time:1 Minute, 48 Second

தென்னக ரயில்வேயின் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ் அகர்வால் இன்று 06.08.22 சிதம்பரம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தனி ஆய்வு ரயிலில் சிதம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த அவர், ரயில் நிலையத்தின் முகப்பு, ஆண், பெண் பயணிகள் காத்திருப்பு அறை, நடைமேடை நடை பாலம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று ஆய்வு செய்தார்.

நடைமேடை முழுவதும் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்ட அவர், ரயில் நிலையம் மற்றும் கட்டிடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

சிதம்பரம் ரயில் நிலையத்தில் சுமார் 45 நிமிடங்கள் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்ட திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் மனீஷ்அகர்வால், பின்னர் ஆய்வு செய்தார் உடன் ரயில்வே பொதுப்பணித் துறை கூடுதல் பொறியாளர் திரு குலசேகரன் அவர்கள் சிதம்பரம் ரயில் நிலைய மேலாளர் திரு பவன்குமார் அவர்கள் மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் திரு சுதீர் குமார் அவர்கள் சிதம்பரம் ரயில் நிலைய வணிக மேலாளர் திரு கார்த்திகேயன் ரயில்வே காவல்துறை ஆய்வாளர் அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %