0 0
Read Time:2 Minute, 5 Second

மயிலாடுதுறை, ஆகஸ்ட்- 07;
மயிலாடுதுறை மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அமைதிப் பேரணியாக சென்று பல்வேறு பகுதிகளில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் படத்திற்கு நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம். முருகன் கலந்துகொண்டு பேரணியை துவக்கி வைத்து புகழ் அஞ்சலி செலுத்தினார்.

அதேபோன்று செம்பனார்கோவில், பொறையார், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தி அமைதி பேரணி நடைபெற்றது. நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு அமைதி பேரணியை துவக்கி வைத்தார். இந்த அமைதி பேரணியில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானூர் கலந்து கொண்டு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் திருவுருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுகவினர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருவுருவ படம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %