0 0
Read Time:1 Minute, 58 Second

சுதந்திர இந்தியாவின் 75வது தின பவள விழா முனனிட்டு வலங்கைமான் இருந்து நீடாமங்கலம் வரை வலங்கைமான் காங்கிரஸ் கட்சியினர் பாதயத்திரை மேற்கொண்டனர். நேற்று காலை வலங்கைமான் மாரியம்மன் கோவில் அருகில் இருந்து புறப்பட்ட பாதயாத்திரைக்கு திருவாரூா் மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமை வகித்தார்.வட்டார தலைவர் ராமலிங்கம் நகர தலைவர் ராஜு முன்னிலை வகித்தனர் நகர செயலாளார் ஆறுமுகம் ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் குலாம் மைதீன் வரவேற்றார். மோகன் கொடியசைத்து வைத்து பாதயாத்திரை துவக்கி வைத்தார்.

பாதயாத்திரையின்போது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் காங்கிரஸ் கட்சி தலைவர்களின் தியாக உணர்வு குறித்துண்டு பிரசுரங்கள் பொது மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டது. மாலையில் நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே பாதயாத்திரை நிறைவுபெற்றது.இதில் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில மாணவர் காங்கிரஸ் பொதுச்செயலாளார் புவனேஸ்வரன் மற்றும் முத்துபேட்டை , திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் ,குடவாசல், மன்னார்க்குடி , நன்னிலம், மற்றும் வலங்கைமான் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட பொதுச்செயலாளார் வீரமணி நன்றி கூறினார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %