1 0
Read Time:2 Minute, 13 Second

IAS தேர்வில் முதலிடம் பெற்ற T. சுவாதி ஸ்ரீ அவர்களுக்கு பாராட்டு விழா 75 வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தியாகி R.மாரியப்பன் அவர்களின் குடும்பத்தினர் டாக்டர் மா.சிவக்குமார் ( எ) ஜீவா தலைவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் தொண்டாமுத்தூர் கௌரவித்தல் அஞ்சல் குடும்பத்தை சேர்ந்த பத்து,பதினொராம் வகுப்பு, பன்னிரண்டு வகுப்பில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு என் சி ஏ பொது ஒருங்கிணைப்பாளர் கே. தேவராஜ் தலைமை ஏற்றார். செயல் பேரவை மற்றும் மாநில செயல் தலைவர் என். சிவசண்முகம் முன்னிலை வகித்தார். மாநில மகிலா கமிட்டி உறுப்பினர் கே. வள்ளிநாயகி துவக்க உரை நிகழ்த்தினார் மாநில சுப்ரீம் கவுன்சிலர் டி. ரமேஷ் குமார் வரவேற்புரை ஆற்றினார்.

மாநில செயலாளர் ஏ. வீரமணி,டாக்டர் மா. சிவக்குமார் ( எ) ஜீவா, ரோட்டரி கிளப் தொண்டாமுத்தூர் தலைவர் ஏ. அரவிந்த் ஆறுச்சாமி, என்ஜினியர் டி. தர்ம பிரபு, எஸ். மனோன்மணி வி.எஸ் சுப்பிரமணியம், மண்டல செயலாளர் ஜி. குருசிவம், மாநில அமைப்பு செயலாளர் ஆர். ரமேஷ்பாபு, மாநில சங்க ஆடிட்டர் எஸ். கார்த்திகேயன், பி. எஸ். ஜி கலை அறிவியல் கல்லூரி மாணவர் தி. கார்த்திக் ஆகியோர் பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினர். விழா நிறைவாக என் சி ஏ பாலு எழுச்சி பேரவை பொருளாளர் என். நாகராஜ் நன்றியுரை வழங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %