0 0
Read Time:2 Minute, 27 Second

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78-வது ஆண்டு பிறந்த நாளையொட்டி சிதம்பரத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் ராஜீவ் காந்தி உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இவ்விழாவிற்கு சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர மன்ற உறுப்பினருமான தில்லை.ஆர்.மக்கின் தலைமை வகித்தார்.

கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத்தலைவர் ஜெமினி எம்.என் ராதா வரவேற்றார்
மாவட்ட துணைத் தலைவர்கள் ஜி.கே. குமார் ஆர்.சம்மந்த மூர்த்தி ராஜா. சம்பத்குமார் 
மாநில ஊடகப்பிரிவு பொதுச் செயலாளர் சிவசக்தி ராஜா டாக்டர் மஞ்சுளா முன்னாள் தொண்டரணி தலைவர் தில்லை கோ குமார் மாவட்ட ஓ.பி.சி தலைவர் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
 சிறப்பு அழைப்பாளராக  மாநில செயலாளர் பி. பி கே சித்தார்த்தன் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உருவ சிலைக்கு மாலை அணிவித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தவர்தாம்பட்டு விஸ்வநாதன் இனிப்பு வழங்கினார்.

மாவட்ட பொது செயலாளர்கள் இலங்கோவன் நெல்சன் எஸ் எஸ் நடராஜன் பொன்.மாதவஷர்மா நாராயணசாமி பி. ராஜ்குமார் மகளிர்அணி நிர்வாகிகள் தில்லை.செல்வி இந்திரா கோ.ஜனகம் , மாலா ராதா உட்பட மற்றும் பலர் கலந்து கொண்டு மலர்  தூவி மரியாதை  செலுத்திய பின் அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். 

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %