0 0
Read Time:1 Minute, 49 Second

பண்ருட்டி அருகே பள்ளி மாணவர்களுக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்ட நிலையில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அக்கடவள்ளி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும் அப்பகுதியில் பேருந்து ஏறுவதற்காக வரும் மாணவர்களுக்கும் முன் பகை இருப்பதாக தெரிகிறது . அப்பொழுது அப்பகுதியில் ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் அங்கே பேருந்தில் ஏறுவதற்காக வந்துள்ளனர்.

ஏற்கனவே இருந்த பிரச்னை தொடர்பாக இவர்களுக்குள் பேருந்து நிலையத்திலேயே வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்த மோதலில் ஒரு பிரிவை சேர்ந்த துளசிதாசன்,சிவா மற்றும் கோபிநாத் ஆகிய மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அதனை அடுத்து காயம் அடைந்த மாணவர்களை பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த புதுப்பேட்டை போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் ஏதேனும் பிரச்சனைகள் நடக்கக்கூடும் என்ற பதற்றம் நிலவுகிறது அதனால் அப்பகுதி முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %