0 0
Read Time:2 Minute, 10 Second

பூம்புகார், செப்டம்பர்- 03;
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் துர்கா ஸ்டாலின் அவர்களின் தந்தையாகிய சா.ஜெயராமன் குடும்ப குலதெய்வம் ஆகும். ஆலயம் புதுப்பிக்கப்பட்டு புதிய ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகின்ற 5-ஆம் தேதி காலை 9:25 மணிக்கு மேல் 10:25 மணிக்குள் நடைபெறுகிறது.

இதனை முன்னிட்டு சனிக்கிழமை காலை தேவதா அனுக்ஞை, எஜமான சங்கல்பம், கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன பூஜை நவக்கிரக ஹோமம், திரவிய ஆகுதி, பூர்ணாகுதி ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து தீப ஆராதனை செய்யப்பட்டு வாஸ்து சாந்தி எனப்படும் பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருமதி துர்கா ஸ்டாலின், மற்றும் அவரது குடும்பத்தினர், இந்து அறநிலையத்துறை திருப்பணிகள் உதவி ஆணையர் ஜெயராமன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் மு. ஞானவேலன், சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன், வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சி தலைவர் அலெக்சாண்டர்,மற்றும் திரளான கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட செய்தியாளர்: இரா.யோகுதாஸ்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %