0 0
Read Time:2 Minute, 28 Second

சிதம்பரம் தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது.

ஆசிரியர் தின விழாவில் சிதம்பர மிட் டவுன் ரோட்டரி சங்கத் தலைவர் பேராசிரியர் பிரகதீஸ்வரன் தலைமையில் முதன்மை விருந்தினராக பூவாலை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன் தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சி துணை வேந்தர் பஞ்சநாதன் முன்னிலையும் வாழ்த்துரையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் ரோட்டரி துணை ஆளுநர் தீபக்குமார் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் புல முதல்வர் கதிரேசன் அண்ணாமலை பல்கலைக்கழக இயக்குனர் ரகுபதி கட்டடப் அமைப்பியல் பொறியியல் துறை பேராசிரியர் ரவிச்சந்திரன், முன்னாள் அரசு பள்ளி தலைமை ஆசிரியரும் பரங்கிப்பேட்டை கலீமா பள்ளியின் முதல்வருமான கலைச்செல்வன் வாழ்த்துரை ஆற்றினார்.

சிதம்பரம் தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் செந்தில்குமார் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியில் மிட் டவுன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மார்க்கெட் நாகராஜ், ஜூவல்லரி கேசவன், தில்லை கோவிந்தராஜன், மோத்திலால், பொருளாளர் எல்.சி.ஆர். நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கஸ்தூரி பாய் கம்பெனி மற்றும் பலகாரம் டாட் காம் சார்பில் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் இறுதியில் சிதம்பரம் மிட் டவுன் ரோட்டரி சங்க செயலாளர் டாக்டர் சின்னையன் நன்றி கூறினார்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %