0 0
Read Time:1 Minute, 57 Second

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையின் அறிவுறுத்தலின்படி, சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், சிதம்பரம் பஸ் நிலையம் காந்தி சிலை அருகில், நகரத் தலைவர் ஏ. ஆர். ரகுபதி தலைமையில், மாவட்டத் தலைவர் அண்ணன் கே பி டி இளஞ்செழியன் , சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கண்டித்து, நமது பாரதிய ஜனதா கட்சியினரும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாநிலச் செயலாளர் பாலசுப்பிரமணியன் , அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் Er.R.ஜெயக்குமார் , கலை கலாச்சார பிரிவு மாவட்டத் தலைவர் மாரியப்பன் , சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் , மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுஜாதா , பிரச்சார பிரிவு மாவட்ட துணைத்தலைவர் கல்யாண சுந்தரம் , மாவட்டச் செயலாளர் ராம்குமார் , அரசு தொடர்பு பிரிவு மாவட்ட துணை தலைவர் குருமூர்த்தி , கீரப்பாளையம் ஒன்றிய தலைவர் ஆர்.மணிவண்ணன் , புவனகிரி ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் , நகர இளைஞர் அணி பொதுச் செயலாளர் மணிகண்டன் , இளைஞரணி பொறுப்பாளர் சதீஸ் மற்றும் நகர பொறுப்பாளர்கள், அணி, பிரிவு பொறுப்பாளர்கள், கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – பாலாஜி, சிதம்பரம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %