0 0
Read Time:2 Minute, 21 Second

பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் – கிழக்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் சிதம்பரத்தில் மாவட்ட கழக செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்  பேரறிஞர் அண்ணா, முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களின் திரு உருவ சிலைகளுக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான என்.முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி இராமஜெயம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழக அம்மா பேரவை துணை செயலாளர் பி.எஸ்.அருள், மாவட்ட கழக அவைத் தலைவர் எம்.எஸ்.என்.குமார், மாவட்ட கழக பொருளாளர் தோப்பு கே.சுந்தர்,  மாவட்ட பாசறை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, வ தலைமை கழக பேச்சாளர் தில்லை செல்வம், ஒன்றிய கழக செயலாளர்கள் ராசாங்கம், அசோகன், , பேரூர் கழக செயலாளர்கள் மாரிமுத்து,, தமிழரசன், சங்கர், பூமாலை கேசவன், நகர அம்மா பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, கூட்டுறஉ சங்க தலைவர் வசந்த், நிர்வாகிகள் மருதவாணன், கருப்பு ராஜா, பானுமதி, சண்முகபிரியன், மார்கெட் நாகராஜன் உமாசங்கர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்: பாலாஜி

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %