0 0
Read Time:2 Minute, 22 Second

திமுக மாவட்டச் செயலாளர் தேர்தலில் நாகை வடக்கு மயிலாடுதுறைக்கு முன்னாள் எம்எல்ஏ ஜெகவீர பாண்டியன் தலைமையில் வேட்புமனு தாக்கல்!

திமுக மாவட்டச் செயலாளர்களுக்கான15-வது அமைப்பு தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அந்த வகையில் திமுக தலைமையகத்தில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாகை வடக்கு மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு மயிலாடுதுறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெகவீரபாண்டியன் தலைமையில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களிடம் இன்று விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது.

மாவட்ட அவைத்தலைவர் பொறுப்பிற்கு சீர்காழி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர்கள் பொறுப்பிற்கு குத்தாலம் முன்னாள் ஒன்றிய பிரதிநிதி சா. கருணாநிதி, மயிலாடுதுறை ஒன்றிய பெருந்தலைவர் காமாட்சிமூர்த்தி , கொள்ளிடம் ஜஸ்டின் விஜயகுமார், மாவட்ட பொருளாளர் பொறுப்பிற்கு கழக மாவட்ட பிரதிநிதி வைத்தீஸ்வரர் கோயில் சாமிநாதன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பிற்கு சீர்காழி முன்னாள் நகர மன்றதலைவரும் முன்னாள் நகர செயலாளருமான இரா. பொன்முடி, கொள்ளிடம் ஒன்றியக் குழு உறுப்பினர் கூழையார் அங்குதன், முன்னாள் ஒன்றிய செயலாளர் மறைந்த கொள்ளிடம் வை. மகாலிங்கம் மனைவி கற்பகம் மகாலிங்கம், மற்றும் முன்னாள் மாவட்ட பிரதிநிதி பனங்காட்டாங்குடி ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஓர் அணியாக வேட்புமனு தாக்கல் செய்தார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %